Friday, March 29, 2013

141.இது தான் காதலா! (ஆண் ஆண் காதல்)


சென்னை - தரமணியில் நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு தன்னுடைய அறை இருக்கும் இடத்திற்கு செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்து கொண்டான் ரவி. அது மதிய நேரமாக இருந்ததால் பஸ்சில் கூட்டம் இல்லாமல் இருக்கைகள் பல காலியாக இருந்தன. வெயில் வாட்டியதால் ஒரு இருக்கையில் ஜன்னலோரமாய் அல்லாமல் உட்புறமாய் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு இன்டர்விவ் சரியாக அமையாத விரக்தியில் வாடிய முகமாய் ஏதோ சிந்தனையில் இருக்கையின் கம்பியில் சாய்ந்தான். தன் கையில் கசக்கி வைத்திருந்த டிக்கெட் சுருட்டு கீழே விழுந்ததை உணர்ந்து அதை எடுத்து விட்டு தனக்கு பின்னால் இருக்கும் இருக்கைகளை சாதரணமாகப் பார்த்துவிட்டு பழைய நிலைக்கே திரும்பி கண்களை மூடிக் கொண்டான்.

மூடியக் கண்களில் இப்போது வேறு மாதிரியான சிந்தனை ஓட ஆரம்பித்தது. பஸ்சை சுற்றும் முற்றும் பார்த்ததில் கடைசி இருக்கையில் இருந்த அந்த வடிவான ஆளைப் பற்றிய நினைவு ஓடத்தொடங்கியது. மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று மனம் தொல்லை செய்ய இப்போது அந்த ஆளை எதேச்சையாக பார்ப்பது போல திரும்பிப் பார்த்தான். அவன் பார்க்கும் போது அந்த ஆளும் அவனை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து உடனே முகத்தை திருப்பிக் கொண்டுவிட்டான். மனசுக்குள் அவர் சாதரணமாக பார்த்தாரா? இல்லை அவருக்கு தன்னைப்  பிடித்திருக்கிறதா? அவரும் தன்னைப் போல ஓரின ஈர்ப்பு உடையவரா? என்று என்னென்னவோ சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது அவனுக்குள். மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு.

மீண்டும் பார்த்து அவர் ஏதாவது தன்னை திட்டிவிட்டால் மானம் போய்விடுமே என்ற பயமும் கூடவே இருந்தது. இதற்க்கெல்லாம் கட்டுப்படக் கூடியதா காமம்! மீண்டும் திரும்பிப் பார்த்தான், சொல்லி வைத்தது போல அவரும் பார்க்கிறார். நாம் திரும்பிப் பார்க்கும் போது தான் அவரும் நம்மை பார்க்கிறாரா? இல்லை அவர் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாரா? என்று குழப்பமாக இருந்தது ரவிக்கு. அவன் அவரை இரண்டு முறை திரும்பிப் பார்ப்பதற்கு முன்னே பஸ் மூன்று நிறுத்தங்கள் தாண்டி இருந்தது. இன்னும் 15 நிமிடங்களில் ரவி இறங்க வேண்டும். ஆகவே அடுத்த இரண்டு நிமிடங்களில் 5 முறையாவது திரும்பிப் பார்த்திருப்பான். ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் அவரும் அவனை பார்த்து கொண்டிருந்தார். தன்னை அறியாமல் தனது ஆண்குறி விறைத்து எழுந்தது ரவிக்கு. நமக்கு தோதான ஆள் தான் என்பதை இருவரும் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். அந்த பார்வை பரிமாற்றங்கள் ரவி மனசுக்குள் புழு நெளிந்த உணவை ஏற்படுத்தியது.

இனி என்ன செய்வது? கண்கள் மட்டும் காதல் புரிந்தால் போதுமா? அடுக்கடுக்காக என்னென்னவோ ஆசைகள். நிறுத்தங்கள் தாண்ட ஆட்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். சற்று நேரத்தில் சட்டென்று அந்த ஆள் ரவியின் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்துக் கொண்டார். அட ச்சே... இவ்வளவு பக்கத்தில் வந்தவர் நம்முடன் வந்து அமரவில்லையே என்று ரவி வருத்தப்பட்டிருக்க வேண்டும். அவனது முகம் அந்த ஏமாற்றத்தை வெளிபடுத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் அவர் தன்னை விட பயம் கொண்டவர், நல்லவராக இருப்பார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ரவி. அவர் இந்த அளவிற்கு ரவியின் பக்கம் நெருங்கி வந்ததும் நிமிடத்திற்கு 72 முறை துடித்துக் கொண்டிருந்த அவனது இதயம் நூரைத் தாண்டி துடிக்க ஆரம்பித்தது. அவனது ஆண்குறி விறைத்து ஜட்டியை மீறி திமிறிக் கொண்டிருந்தது. லேசாக ஆண்குறியில் யாராவது உராய்ந்து விட்டால் கூட விந்து வெளியேறிவிடும் போல இருந்தது. 

தன்னுடைய இதயம் மட்டுமல்ல, அந்த ஆளினுடைய இதயம் கூட அதிகமாக துடித்துக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தான். உண்மையில் தன்னை விட அந்த ஆள் தான் அதிக பயத்தோடு இருப்பதையும் கவனித்தான். அது பயமா? இல்லை. அது காம உணர்ச்சி. அவனது பார்வை ரவியை கொலை செய்வது போல இருந்தது. அவனது ஆண்குறி விறைத்திருப்பதை பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது. மற்றவர்கள் தவறாக புரிந்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக ஒருமுறை திரும்பி பார்க்கவே பயமாக இருக்கும் போது அவனது ஆண்குறியை எப்படி பார்ப்பது!

இதுவரைக்கும் ஒரு 35 வயது மதிக்கத்தக்கவராக நினைத்திருந்தது தவறு என்பதுவும் அவன் அருகில் வந்த பிறகு தான் புரிந்தது. அதிகமானால் அவனுக்கு 28 வயது தான் இருக்கும். கம்பளிப் பூச்சி போன்ற மீசையும் லேசான தாடியுமாக இருந்த அவன் கண்கள் உண்மையாகவே ஆளை மயக்கிவிடும் அழகு. கண்கள்களால் காதல் செய்வதும் காமம் அனுபவிப்பதும் எத்தனை இன்பமானது! அந்த இன்பத்தை அணு அளவும் குறையாமல் இருவரும் அனுபவித்திருக்க வேண்டும். அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. இப்படிச் சொல்லலாம், சுய இன்பத்தின் போது தன்னையே மறந்து இன்பத்தில் லயிக்கும் அந்த உச்சகட்ட இன்பத்தினைப் போன்ற  உன்னத உணர்வு அது.


ஆனால் இப்போது கண்களால் சுகம் அனுபவிப்பது கூட நரகமாக மாறியது ரவிக்கு. அவனை ஆடை இல்லாமல் நிர்வாணமாகப் பார்க்க வேண்டும், அவனைத் தொட வேண்டும், உச்சி முதல் பாதம் வரை முகம் பதிக்க வேண்டும், அவன் ஆண்குறியை கையால் தொட்டு வாயால் சுவைக்க வேண்டும் என்று கற்பனை நீண்டுகொண்டே போனது. பஸ்ஸில் ஏறிய பிறகு சில பார்வைகளில் கண்களால் காதலித்து அடுத்த சில நிமிடங்களில் அந்த காதலில் காம உணர்வு ஊற்றெடுத்து தீராப் பசியோடு இருவரும் அருகருகில் இருகின்றனர். இருந்தும் என்ன பயன்?

பேருந்து கிண்டி வந்துவிட்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் ரவிக்கு இறங்க வேண்டும். இனிமேலும் அவன் பேசுவான் என்று காத்திருப்பதில் பயனில்லை. ஆனால் தனக்கும் பேச பயம். என்ன செய்வது? சட்டென்று பேன்ட் பாக்கெட்டில் இருந்த கைபேசியை அவன் பார்க்கும் விதமாக கையில் வைத்துக் கொண்டான் ரவி. ரவியினுடைய  கையில் மொபைல் போன் இருப்பதை அவன் சட்டை செய்யவேயில்லை. அவனுக்குப் புரியவில்லையா? அல்லது அவனிடம் கைபேசி இல்லையா? என ரவிக்கு குழப்பமாக இருந்தது. ஆனால் அவன் பேச நினைக்கிறான், அவன் கண்கள் ஏதோ கேட்க நினைக்கிறது. பேசவில்லை. இத்தனை உள்மனப் போராட்டங்களும் ஆட்கள் நிரம்பிய பேருந்துக்குள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

ரவிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தான் இறங்கப் போவதை உடல் அசைவுகளாலும், உடைகளை சரி செய்து கொள்வது போலவும் காட்டிக்கொண்டான். அவனும் அதை புரிந்துக் கொண்டிருக்க வேண்டும். என்ன பயன்? பேச இயலாதவர்களைப் போல இருவரும் மின்னி முழுங்கிக் கொண்டிருக்கிறார்களேத் தவிர பேசும் துணிவில்லை. இரண்டு பேருக்குமே பக்கத்தில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்ற பயம் வேறு. இப்போது கிட்டத்தட்ட இரண்டுபேருமே பேசும் நம்பிக்கையை இழந்திருக்க வேண்டும்.

காதல் ரசம் சொட்டிய கண்களில் பிரிவின் சோகம் கோரத் தாண்டவம் ஆடத் துவங்கிவிட்டது.ஏமாற்றத்தின் வலி ஆண்குறியையும் பழைய நிலைக்கே திருப்பியிருந்தது. 20 நிமிடங்களில் எதை எதையோ பகிர்ந்துக்கொள்ள ஆசைப்பட்ட இரண்டு உள்ளங்களும் முதலும் கடைசியுமாக ஒரு புன்னகையை மட்டும் பரிமாறிக் கொண்டது. ரவி எழுந்து படிக்கட்டிற்க்கு அருகில் சென்று அவனை திரும்பிப் பார்த்தான். அவன் தெரியவில்லை. பஸ்சில் கூட்டம் நிரம்பியிருந்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றம் ஒருவித புன்னகையை வரவழைத்தது ரவிக்கு. பஸ்சிலிருந்து இறங்கி இரண்டடி தூரம் நடந்து மீண்டும் திரும்பிப் பார்த்தான். பேருந்து புறப்பட்டிருந்தது.

 

No comments:

Post a Comment